Sunday, May 13, 2012

இராமரின் சரிதை (அ) இராமவரலாறு

ஏற்றதால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியை தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். குறித்த காலத்தில் அயோத்தியின் அரசுரிமை இலந்த மரஉரி தரித்து மனைவி சீதைஉடனும் அன்பு தம்பி இலக்குவனுடனும் கானகம் எகீனான் .கங்கையை கடந்து கால் நடையாக வரும் போலுது இலக்குவனை கண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தால்.இலக்குவனை நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் .இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற ராவணன் ராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்க சீதையை சிறை எடுத்து இலங்கைக்கு சென்று விட்டான்.பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையை காணாது தவித்த ராமர் இலக்குவனர் தமிலக எல்லைக்குள் வந்தார்கள் .இறுதியாக ராமநாதபுரம் வந்து விட்டனர்.இவ்வாறாக ராமரை ராம அவதாரமும் ,ராம அவதாரம் ராமநாதபுரம் என முறுவியது.

ராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேலையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பி தேடி கண்டு பிடித்து வருமாறு அன்பு கட்டளை இட்டார் .கட்டளையை சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரே அஞ்சிநேயர்(அனுமான்) ஆவார்.விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்) தனுகோடிக்கு கிலக்கே சுமார் 25 கி.மீ தூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ளது.1964 புயலுக்கு முன் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாற்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. 
தற்போது இல்லை.இவ்வாறாக ஆஞ்சநேயர்
குந்துகாலிட்டு  விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கு தளமாகவும் கடல் நீரை நண்ணீராக்கும் ஆளையும் செயல் பட்டு வருகிறது.

மேலும் சீதை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கி சிவலிங்கம் பூஜை நடத்த  வேண்டும் அதற்கு லிங்கம் தேவைபடுகிறது என்று கூறினால் சீதை. அதை கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறி பறந்தார். ஆஞ்சநேயர் தாமதம் ஆனதால் ,அவசரபட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாக பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தை கொண்டு வந்தார்.அன்னை சீதை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே  என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கி சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து வீடு”,என சீதை கூறினால்.மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிகையில் வால் அரூந்து  சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விலுந்துள்ளார்.அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இவ்வாறாக அன்றயே காலந்தோட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும்,இலங்கயில்யுள்ள
தலைமன்னாரும் சாயல் குடியிலிர்ந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வாலி நோக்கம் என்ற இடமும் ஆகும்.மேற்கண்ட சரித்தரசான்றுகளுடன் ராமரின் கதை அமைதுள்ளதால் ,ராமாயணம் இதிகாசம் இல்லை .ராமர் சரிதை (அ) ராமர் வரலாறு என்பதே சரி.
                                                                          
                            திரட்டியவர்:    
                                 பொன்.களங்சியம் 
                                 ஓய்வு தலைமை ஆசிரியர்
                                 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                 மண்டபம்
                                   ராமநாதபுரம் மாவட்டம் .


0 comments:

Post a Comment