Friday, March 16, 2012

சுவையான மாம்பழ அல்வா

கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழத் துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

மாம்பழத் துண்டுகளை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். மசித்து வைத்த மாம்பழங்களுடன் சர்க்கரையைப் போட்டு கிளறவும்.

பின்ன‌ர் பால் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் இருக்க நெய்யை சேர்த்து கிளறவும்.

அத‌ன்‌பின் கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு. ஆறிய பிறகு சிறுத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மாம்பழ அல்வா ரெடி!


0 comments:

Post a Comment