Monday, December 19, 2011

சூர்யா – வெங்கட்பிரபு இணையும் புதிய படம்

மங்காத்தா ஹிட் படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. முன்னணி நடிகர்களே அவருக்கு போன் செய்து நாம ஒரு படம் பண்ணலாமா என்று கேட்கிறார்களாம். ஆனால், வெங்கட்பிரபுவோ அடுத்து சூர்யாவுடன் இணைகிறார். சூர்யாவை வைத்து இவர் இயக்கப் போகும் படத்திற்கு இன்னும் தலைப்பு ஏதும் வைக்கப்படவில்லை. சூர்யாவுக்கு என ஒரு கதையை ரெடி செய்துவிட்ட வெங்கட்பிரபு சூர்யாவிடம் சொல்லி ஓ.கே.வும் வாங்கிவிட்டாராம்.


இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துப் பார்த்து ஒவ்வொருவராக ரிஜக்ட் செய்யப்பட்டு கடைசியில் ரிச்சாவை தேர்வு செய்திருக்கிறார்கள். யுவன், பிரேம்ஜி என வெங்கட்பிரபுவுக்கே உரிய கலகல டீமுடன் களம் இறங்குகிறது இந்த கூட்டணி மேலும் ஒரு வெற்றிப் படத்தை உருவாக்குவதற்காக.


0 comments:

Post a Comment