Wednesday, December 21, 2011

விக்ரமுக்கு ஈடு கொடுக்க தயாராகி விட்டேன்! அஞ்சலி பேட்டி!!

விக்ரமுக்கு ஈடுகொடுத்து நடிக்க தயாராகி விட்டேன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை அஞ்சலி கரிகாலன் படத்தில் விக்ரம் ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான “எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், விக்ரம் படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் உள்ளவை. அவருடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைக்க தயாராகி வருகிறேன். விக்ரமுடன் ஈடு கொடுத்து நடிக்க கிட்டத்தட்ட தயாராகி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.


0 comments:

Post a Comment