Thursday, December 22, 2011

இந்திய மாநிலங்களில், கிருஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பண்டிகைக்கான விற்பனை சூடுபிடித்துள்ளது.வித விதமான அலங்காரப் பொருள்களையும் கிறிஸ்மசுக்குத் தேவையான பொருள்களையும் வாங்குவதில், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், பல பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக, கடைக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், கிருஸ்மஸ் தாத்தாவின் உருவ பொம்மைகளும் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்மஸ் மரங்களும் கடைகளின் முன்னால் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் கேக்குகளின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது..


0 comments:

Post a Comment