Tuesday, December 27, 2011

காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!

பெயரில் இனிமை கொண்ட நடிகை, பேச்சில் இவ்வளவு கராரா என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம். நமக்கும், கேரளாவுக்கும் தண்ணீரில் மட்டும் தான் பிரச்னை. ஆனா சினிமாவை பொறுத்தவரை அப்படி ஒரு நெருக்கம்.கோடம்பாக்கத்தின் டாப்மோஸ்ட் ஹீரோயின் பட்டியல் எடுத்துப் பாருங்க அதுல அதிகம் இருப்பது கேரளத்து அம்மணிகள் தான்.

இப்படி நிலைமை இருப்பதால் தானோ என்னவோ, கேரள இறக்குமதி நடிகைகளின் ஆதிக்கமும், ஆணவமும் சற்று அதிகரித்து வருகிறது என கூறுகிறது தெரிந்த வட்டாரம். இதற்கு சான்று தான் இது! வாகை சூடவா படத்தில் வாகை சூடாவிட்டாலும், கொடிவீரனை வளைத்துப் போட்டுக் கொண்ட அன்னக்கொடி ஹீரோயின் இனியாவிடம், தங்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று தருமாறு கேட்டு இருக்கிறார்கள். பேட்டிக்கு பேமென்ட் எவ்வளவு தருவீர்கள், பேமென்ட் கொடுத்தால் பேட்டி தருகிறேன் என்று கூறியுள்ளார் இனியா. ஷாக்கான, தொலைக்காட்சி நிறுவனம், உங்களிடம் பேட்டி தானே கேட்டோம் அதற்கு எதற்கு பேமென்ட் என கேள்வி எழுப்ப, என் பேட்டியை போட்டு நீங்கள் சம்பாதிப்பீர்கள் தானே ? என எதிர் கேள்வி எழுப்பி மேலும் ஷாக் கொடுத்திருக்கிறார் அம்மணி.

இதை அறிந்த கோலிவுட் வட்டாரம் பேட்டிக்கே காசு கேட்டா இனி கால்ஷீட் காசையும் ( சம்பளம்) ஏற்றி விடுவாரோ என்று அதிர்ந்து போயிருக்கிறதாம்.


0 comments:

Post a Comment