Wednesday, December 21, 2011

பெண்களுடன் ஆபாசமாக நடனம்: ஷாருக் மீது கேரள போலீஸ் வழக்கு

கொச்சி: கேரளாவில் நகைக்கடையை திறப்பு விழாவிற்கு சென்ற போது துணை நடிகைகளுடன் ஆபாச நடனம் ஆடியதாக இந்தி நடிகர் ஷாருக்கான் மீது கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாமாநிலம் கொச்சியில் டிசம்பர் 4ம் தேதி ஜவுளிக்கடை திறப்புவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் வெளியான ரா ஒன் பாடல் ஒன்றுக்கு துணை நடிகைகளுடன் இணைந்து ஆடினார். அந்த நடனம் ஆபசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து கேரள போலீசார் ஆபாச நடனம் ஆடிய ஷாருக்கான் மீதும், அந்த ஜவுளிக்கடையின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


0 comments:

Post a Comment