Monday, December 19, 2011

மீசை முளைக்காதவருக்கு போலீஸ் வேடம்: சிம்புவை தாக்கி பேசவில்லை – ஜீவா மறுப்பு

சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.
அதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.


நிகழ்ச்சியில் ஜீவா பேசும்போது இயக்குனர் மிஸ்கின் “முகமூடி” படத்தில் நடிக்க 90 நாள் கால்ஷீட் கேட்டார். நான் 120 நாட்கள் கொடுக்க தயாராக இருக்கிறேன். இரு வருடங்களுக்கு முன் மிஸ்கின் வெற்றிகரமாக ஓடிய “அஞ்சாதே” படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைத்தான் அழைத்தார். நான் அதை ஏற்கவில்லை.

சரியாக மீசைகூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிப்பது? அதற்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்று கூறி விட்டேன். “ஒஸ்தி” படத்தில் சிம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரைத்தான் ஜீவா தாக்கி பேசியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து ஜீவாவிடம் கேட்டபோது, மறுத்தார். “அஞ்சாதே” படத்தில் மிஸ்கின் போலீஸ் வேடத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு மீசை முளைக்கவில்லை. அதைத்தான் குறிப்பிட்டு பேசினேன். வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. அடக்கடவுளே என் பேச்சில் இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்களே என்றார்.


0 comments:

Post a Comment