Saturday, December 24, 2011

ஈரோட்டில் 23 யானைகள் பலி: வனத்துறை

ஈரோடு: ஈரோட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 23 யானைகள் வரை பலியாகியுள்ளதாக வனத்துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 1200 யானைகள் உள்ளது. இதில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகின. ஒன்று கொல்லப்பட்டது. மீதி 19 யானைகள் இயற்கையாக பலியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 2 யானைகள்பலியானதாக ஈரோடு மாவட்ட வன அதிகாரி அருண் கூறினார்.


0 comments:

Post a Comment