இந்திய கடற்படையில்
ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப 10-ம் வகுப்பு முதல் டிப்ளமோ
படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஐ.என்.எஸ். அடையாறு வெளியிட்ட செய்தி: தமிழகத்திலிருந்து இந்திய
கடற்படைக்கு 2012-ம் ஆண்டு மார்ச் / ஏப்ரல் மாதம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில்,
மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ
படித்திருக்க வேண்டும்.
அதில் கணிதம், இயற்பியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 1995-ம் ஜூலை 31-ம் தேதிக்குள் பிறந்திருக்க
வேண்டும். இப்பணிக்கு 2012 ஜனவரி 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
10-ம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றவர்கள் கடற்படையில்
சமையல் மற்றும் ஸ்டீவார்டு ஆகிய பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பணிக்கு
2011 டிசம்பர் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட பணிக்கு
எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், உடல்
தகுதி, மருத்துவத் தகுதி மூலமும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு ஐ.என்.எஸ். அடையாறு, துறைமுக வளாகம், ராஜாஜி சாலை,
சென்னை-600009 என்ற முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
ReplyDeleteVisit Here: http://bit.ly/vqP0GV