தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Friday, December 30, 2011

இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு

மதுரை: ""இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.

இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா - சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல.

கி.பி., முதலாம் நூற்றாண்டு முதல் இரு நாடுகளுக்கும் நட்புறவு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த "காஷ்யப்பர் மதாங்கர்', "தர்மரங்கா' சீனா வந்தனர். ஐந்தாம் நூற்றாண்டில் "போதிதர்மர்' வந்து, ஜென் புத்திசத்தை ஆரம்பித்தார். இவர் எப்படி வந்தார் என்பது குறித்த கதை இன்றும் சீனாவில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில், சீனாவில் இருந்த புத்ததுறவிகள் இந்தியா வந்தனர். யுவான்சுவாங் பத்தாண்டுகள் இங்கிருந்து, சமஸ்கிருத புத்த பாடங்களை சீனாவுக்கு மாற்றினார். இரு நாடுகளுக்கும் இடையே 99.99 சதவீதம் நட்பும், 0.1 சதவீதம் புரிந்துக் கொள்ளாமையும் உள்ளது. இந்தோ -சீனா நட்பு பொது வளர்ச்சிக்கு முக்கியம். சீனாவில் இந்தியா 400 மில்லியன் டாலரும், இந்தியாவில் சீனா 500 மில்லியன் டாலரும் முதலீடும் செய்துள்ளன. உலக பொருளாதார மந்தநிலையை இரு நாடுகளும் சமாளிக்கின்றன. இந்நாடுகள் இல்லாமல் உலகின் எந்த பிரச்னையும் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, என்றார். சங்க துணைத்தலைவர் பெர்னாண்டஸ், பேராசிரியர் ஜெயகாளை, வக்கீல் அன்னபிரகாஷ் பங்கேற்றனர்

ரேங்கிங்: சச்சின் முன்னேற்றம்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 4வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் அரங்கில், சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். இவர், 4வது இடத்தை தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிசுடன் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததே இந்த முன்னேற்றத்துக்கு காரணம். மெல்போர்ன் டெஸ்டில் பேட்டிங்கில் சோபிக்கத்தவறிய சீனியர் வீரர் ராகுல் டிராவிட், இரண்டு இடங்கள் பின்தங்கி, 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான லட்சுமண் (17வது இடம்), சேவக் (18வது) "டாப்-20' வரிசையில் உள்ளனர்.


பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், ஐந்து இடங்கள் முன்னேறி 42வது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில், ஐந்து இடங்கள் முன்னேறி, 7வது இடத்தை, இலங்கையின் ஹெராத்துடன் பகிர்ந்து கொண்டார். மெல்போர்ன் டெஸ்டில் வேகத்தில் அசத்திய ஆஸ்திரேலியாவின் பென் ஹில்பெனாஸ் (22வது இடம்), ஜேம்ஸ் பட்டின்சன் (31வது) ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்

வசூலில் கலக்கிய 10 படங்கள்

தமிழில் இந்த வருடம் 120 படங்கள் ரிலீசாகின. ஆனால் மிகக் குறைந்த படங்களே தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டின. சிறு பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்ப டுத்தின.
காஞ்சனா, மங்காத்தா இரண்டும் இவ்வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படங் களாக அமைந்தன.
அஜீத் வில்லன் வேடத்தில் வந்த மங்காத்தாவுக்கு படம் ரீலிசின்போது ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினமாக இருந்ததும் படத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.
காஞ்சனா பேய் படமாக வந்தது. கொலை, ரத்தம் என்று இல்லாமல் காமெடித் தனமாக இதன் திரைக் கதையை கையாண்டது, குழந்தைகளையும், பெண்களையும் பெருமளவில் கவர்ந்து இழுத்தது. இதனால் இப்படம் கோடி கோடியாய் வசூல் ஈட்டியது. பிற மாநிலங் களிலும் “காஞ்சனா” சக்கை போடு போட்டது.
கோ, சிறுத்தை, எங்கேயும் எப்போதும் படங்கள் இவ் வாண்டின் சூப்பர் ஹிட் படங்கள் அந்தஸ்தை பெற்றுள்ளன.

கோ படத்தின் திரைக் கதையும், பாடல்கள், ஒளிப் பதிவும் அனைத்து தரப்பி னரையும் கவர்ந்தது. ஜீவா, கார்த்திகா ஜோடி கச்சிதமாக பொருந்தினர். கே.வி. ஆனந்த் இயக்கி இருந்தார்.

எங்கேயும் எப்போதும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்தார். பஸ் விபத்தை வைத்து கதை பின்னப்பட்டு இருந்தது. அழுத்தமான கதை யும் விறுவிறுப்பான காட்சி அமைப்பும் அதிர வைக்கும் கிளைமாக்சும் ரசிகர்களை கவர்ந்தன.

வேலாயுதம், 7 ஆம் அறிவு, தெய்வத்திருமகள், ஆடுகளம், வானம் படங்களும் இவ்வருடத்தின் ஹிட் படங்கள் பட்டியலில் உள்ளன.
7 ஆம் அறிவில் சூர்யாவின் போதி தர்மர் கெட்டப் பேசப்பட்டது. தெய்வத் திருமகள் படத்தில் விக்ரம் மனநலம் குன்றிய கேரக்டரில் பொருந்தி இருந்தார்.

ஆடுகளம் படம் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. வானம் படத்தில் சிம்பு கிளைமாக்சில் இறந்து போகும் ஹீரோயிசம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
காவலன், அவன் இவன், மயக்கம் என்ன படங்களும் ஆரவாரம் இல்லாமல் ஜெயித்தன.

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!


2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது.

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது.

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம்.

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள்.

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா.

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா.

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது.

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல்.

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

Thursday, December 29, 2011

இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!


சென்னை: ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மோகன், ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பால கிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான சரண் எனக்கு அறிமுகமானார்.

சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை பலமுறை நான் திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லை.

இதற்காக அவர் கொடுத்த செக்குகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. எனவே அவர் மீது செக் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. 3 முறை சரண் சார்பில் அவரது வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டார். ஆனால் சரண் ஆஜராகவில்லை.

இதையடுத்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சரணுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

வளசரவாக்கம் போலீசார் சரணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 3-ந்தேதி மீண்டும் விசார ணைக்கு வருகிறது. இதையடுத்து சரண் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் எனத் தெரிகிறது.
 

பாங்காக் போகும் விஷால் - த்ரிஷா ஜோடி!


சமரன் படத்துக்காக பாங்காக் போகின்றனர் நடிகர் விஷாலும் ஹீரோயின் த்ரிஷாவும்.

சிம்புவின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பெரும் தோல்வியைத் தழுவிய ஒஸ்தி படத்துக்குப் பிறகு பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் புதிய படம் சமரன். விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தந்த திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை இயல்பானது. ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அதனால் அவன்படும் பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பார்க்காத புதிய அனுபவத்தை இந்தப் படம் உங்களுக்குத் தரும் என்கிறார் இயக்குநர் திரு. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் நடந்தது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் ஐரோப்பாவின் சரித்திர பிரசித்தி இடங்களில் சண்டைக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
  

'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்!

துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.

பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.

'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.

இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.

மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

Tuesday, December 27, 2011

உலகின் அதிக மைலேஜ் தரும் புதிய ஹைபிரிட் கார்: டொயோட்டோ அறிமுகம்

உலகின் அதிக மைலேஜ் தரும் வகையிலான புதிய ஹைபிரிட் மாடல் ஹேட்ச்பேக் காரை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது.

இரட்டை எரிபொருளில் இயங்கும் ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.

அந்த நிறுவனத்தின் பிரையஸ் ஹைபிரிட் கார் உலகின் அதிகம் விற்பனையாகும் காராக திகழ்கிறது. இந்த நிலையில், அக்வா என்ற பெயரில் புதிய ஹைபிரிட் காரை டொயோட்டோ ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அக்வா சர்வதேச சந்தையில் பிரையஸ் சி என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய கார் லிட்டருக்கு 35.4 கிமீ மைலேஜ் செல்லும் என டொயோட்டோ தெரிவித்துள்ளது. உலகின் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக அக்வா இருக்கும் என்றும் டொயோட்டோ தெரிவித்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் பிரையஸ் அதிக மைலேஜ் (லிட்டருக்கு 32கிமீ)கொடுக்கும் ஹைபிரிட் கார் என்ற பெருமையை பெற்றிருந்தது.

இந்த புதிய ஹைபிரிட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஹைபிரிட் கார் ஜப்பானில் ரூ.11.40 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், வரும் 2015ம் ஆண்டிற்குள் புதிதாக 10 ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

தவிர, 2020ம் ஆண்டிற்குள் அனைத்து ரக கார்களிலும் ஹைபிரிட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவும் டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

3 வார யோசனைக்குப் பின் நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!


கன்னடப் படத்துக்காக உடலில் ஒட்டுத் துணியின்றி நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார் முன்னணி நடிகை பூஜா காந்தி.

தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் 'தண்டுபால்யா' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமாகியுள்ளது.

இது ஒரு க்ரைம் த்ரில்லர். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "நான் இயக்கும் முதல் க்ரைம் த்ரில்லர் இந்தப் படம்.

தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதை இது. 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இதைப் படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன்.

3 வார யோசனைக்குப் பிறகு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார். சமீபத்தில் அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. யூனிட் ஆட்களில் சிலர் மட்டும் இருக்க, ரகசியமாக படமாக்கினோம். பயமோ கூச்சமோ இல்லாமல் நடித்தார் பூஜா. இந்தக் காட்சியை அருவருக்கும்படி இருக்காது," என்றார்.
  

உச்சிதனை முகர்ந்தால்

இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் 13 வயது தமிழ்ச்சிறுமி, தாயுடன் இந்தியா வந்து சேர்கிறாள். சமூக ஆர்வலர் சத்யராஜ், அச் சிறுமிக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். சிறுமியைப் பரிசோதிக்கும் டாக்டர், கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைச் சொல்ல, அனைவருக்கும் அதிர்ச்சி.  தாய், கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறார். முடியாத நிலையில், தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதையறிந்த சங்கீதா, தற்கொலை முடிவை மாற்றுகிறார். வயிற்றில் வளரும் குழந்தையுடன் வலம் வரும் சிறுமியின் தந்தை, ராணுவத்தால் கொல்லப்பட, அதை மகளிடம் சொல்லாமல் இலங்கைக்கு செல்கிறார் தாய். சத்யராஜும், சங்கீதாவும் சிறுமியை காக்கின்றனர். இந்நிலையில், சங்கீதா கர்ப்பமாகிறார். அவரைப் பார்க்க வரும் அம்மா, சிறுமியின் கர்ப்பத்தைக் கண்டு அதிர்ந்து, சத்தம் போடுகிறார். தன்னால்தானே பிரச்னை என்று வருந்தும் சிறுமி, யாரிடமும் சொல்லாமல், வெளியேறுகிறார். அவளை திருநங்கை ஒருவர் காப்பாற்றுகிறார். பிறகு  அவளுக்கு பாலியல் நோய் இருப்பது தெரியவர, முடிவு என்ன என்பது மனதை உருக்கும் கிளைமாக்ஸ்.

அதிர வைக்கும் பரிதாபத்துக்குரிய சிறுமி வேடத்தில் வரும் நீநிகா, படத்தின் நாயகி. வெடிச்சத்தம் கேட்டும், விமானம் பறப்பதைப் பார்த்தும், தன்மீது குண்டு வீசுகிறார்கள் என்று நினைத்து பயப்படும்போது, கரைய வைக்கிறார். பிஞ்சு வயிற்றில் கர்ப்பத்தைச் சுமந்துகொண்டு, வீட்டிலுள்ள செல்லப்பிராணிக்கு பெயரிட்டு கொஞ்சுவதாகட்டும், தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி ரோஜாக்களை வளர்ப்பதாகட்டும், புறாக்களுக்கு தீனி போடுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் பரிதாபத்தை அள்ளுகிறார். அவரது இலங்கைத்தமிழ்ப் பேச்சு, இனிக்கிறது. இந்தியாவுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் தேடி வந்த சிறுமிக்கும், அவளது தாயாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் தம்பதியராக சத்யராஜ், சங்கீதா மனதில் நிற்கின்றனர். நீநிகாவின் கர்ப்பம் தெரிந்ததும் தானே அவளுக்கு இன்னொரு தாயாக மாறும் சங்கீதாவின் நடிப்பு யதார்த்தம். போலீசாக வரும் சீமான், டாக்டர்களாக வரும் நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருள்மணி மனதில் பதிகிறார்கள்.

பி.கண்ணன், அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு கைகொடுத்துள்ளது. இமான் இசையில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ பாடல் இனிய மெலடி. தமிழருவி மணியனின் வசனங்கள், நறுக். தமிழர்கள் படும் அவஸ்தையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். என்றாலும், 13 வயது சிறுமிக்கு தான் கர்ப்பமான விஷயம் தெரியாதா என்ன? சிறுமியை பரிசோதிக்கும் டாக்டர்கள், ஆரம்பத்திலேயே அவளுக்கு நோய் இருப்பதைக் கண்டறியாதது எப்படி என்பது உட்பட எழும் ஏராளமான கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உச்சிதனை முகரலாம்

காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!

பெயரில் இனிமை கொண்ட நடிகை, பேச்சில் இவ்வளவு கராரா என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம். நமக்கும், கேரளாவுக்கும் தண்ணீரில் மட்டும் தான் பிரச்னை. ஆனா சினிமாவை பொறுத்தவரை அப்படி ஒரு நெருக்கம்.கோடம்பாக்கத்தின் டாப்மோஸ்ட் ஹீரோயின் பட்டியல் எடுத்துப் பாருங்க அதுல அதிகம் இருப்பது கேரளத்து அம்மணிகள் தான்.

இப்படி நிலைமை இருப்பதால் தானோ என்னவோ, கேரள இறக்குமதி நடிகைகளின் ஆதிக்கமும், ஆணவமும் சற்று அதிகரித்து வருகிறது என கூறுகிறது தெரிந்த வட்டாரம். இதற்கு சான்று தான் இது! வாகை சூடவா படத்தில் வாகை சூடாவிட்டாலும், கொடிவீரனை வளைத்துப் போட்டுக் கொண்ட அன்னக்கொடி ஹீரோயின் இனியாவிடம், தங்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று தருமாறு கேட்டு இருக்கிறார்கள். பேட்டிக்கு பேமென்ட் எவ்வளவு தருவீர்கள், பேமென்ட் கொடுத்தால் பேட்டி தருகிறேன் என்று கூறியுள்ளார் இனியா. ஷாக்கான, தொலைக்காட்சி நிறுவனம், உங்களிடம் பேட்டி தானே கேட்டோம் அதற்கு எதற்கு பேமென்ட் என கேள்வி எழுப்ப, என் பேட்டியை போட்டு நீங்கள் சம்பாதிப்பீர்கள் தானே ? என எதிர் கேள்வி எழுப்பி மேலும் ஷாக் கொடுத்திருக்கிறார் அம்மணி.

இதை அறிந்த கோலிவுட் வட்டாரம் பேட்டிக்கே காசு கேட்டா இனி கால்ஷீட் காசையும் ( சம்பளம்) ஏற்றி விடுவாரோ என்று அதிர்ந்து போயிருக்கிறதாம்.

மன அழுத்தமா? உடம்பும் மனசும் குளிர நல்லா குளிங்க!


மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர்.

எண்ணெய் மசாஜ்

‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கை மூலிகைகள்


குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொடுகு நீக்குங்கள்


மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தானதா சாப்பிடுங்க


மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.
 

Monday, December 26, 2011

செயற்கை மார்பகத்திற்குள் 2.5 கிலோ கொகைனை புதைத்து எடுத்து வந்த மாடல் அழகி

ரோம்: பிரேசிலிலிருந்து ரோம் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி, தனது மார்பகத்திற்குள் 2.5 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த போதைப் பொருளைப் பறிமுதல் செய்து அழகியையும் கைது செய்தனர்.

அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. எம்எப்எம் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அப்பெண் பிரேசிலின் சாவோ பாலோ நகரிலிருந்து விமானம் ஏறியுள்ளார். ரோம் நகரின் லியானார்டோ டாவின்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது அவரைப் பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

காரணம், வழக்கமாக பெண்களுக்கு இருப்பதை விட மிகப் பெரிய சைஸில் அவரது மார்பகங்கள் இருந்ததே. அதேபோல அந்தப் பெண்ணின் பின்புறம் வழக்கத்தை விட மிகப் பெரிதாக எடுப்பாக இருந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட அழைத்துச் சென்றனர். பெண் அதிகாரிகளை வைத்து சோதனையிட்டபோது அவர் தனது இயற்கை மார்பகத்திற்கு மேலே செயற்கையாக மார்பகத்தை செட்டப் செய்து அதற்குள் கொகைனை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதேபோல தனது பின்புறத்தையும் செயற்கையாக பெரிதாக்கி அதற்குள்ளும் கொகைனை வைத்திருந்தார் அப்பெண்.

இதையடுத்து கொகைனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணையும் கைது செய்தனர்.

ஏழரை மணிநேர பேட்டரி பேக்கப்புடன் புதிய டெல் லேப்டாப்!

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் டெல் லாட்டிட்யூட் இ6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான லேப்டாப் என்று கூறலாம். முதல் பார்வையில் இந்த லேப்டாப் கவரக்கூடிய விதத்தில் இல்லை என்றாலும் இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது.

டெல் லாட்டிட்யூட் இ6220 லேப்டாப்பின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 12.5 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 128 ஜிபி கொண்ட சாலிட் ஸ்டேட் டிரைவையும் இது உள்ளடக்கியுள்ளது.

இதன் ப்ராசஸரை எடுத்துக் கொண்டால் அது இன்ட்ல் கோர் ஐ5 – 2540 ப்ராசஸர் அல்லது ஐ7 – 2630எம் ப்ராசஸரைக் கொண்டிருக்கும். இதன் மொத்த மெமரி 4 முதல் 8 ஜிபி வரை ஆகும். அதுபோல் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இன்டக்ரேட்டட் எச்டி 3000 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட்டைக் கொண்டுள்ளது. மேலும் 1080பி வீடியோ ப்ளேபேக்கும் உள்ளது.

இந்த டெல் லேப்டாப்பின் பேட்டரி 7.30 மண நேரி இயங்கு நேரத்தை அளிக்கிறது. இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.7 கிலோவாகும். அதுபோல இது விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இஎஸ்எடிஎ/யுஎஸ்பி கோம்போ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை இது தாங்கி வருகிறது. மேலும் எக்ஸ்பிரஸ் கார்டு ஸ்லாட், வெப்காம் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவை இந்த லேப்டாப்பை மெருகு ஏற்றுகின்றன.

இந்த டெல் லாட்டிட்யூட் இ6220 லேப்டாப்பை முதலில் பார்க்கும் போது ஒரு குழப்பம் இருக்கும். ஏனெனில் இது உருவத்தில் நெட்புக்கைவிட சிறியதாக இருக்கிறது. ஆனால் மற்ற சாதாரண லேப்டாப்புகளைவிட இதன் செயல் திறன் பட்டையைக் கிளப்பி விடும். இதன் கீபோர்டு மிக அட்டகாசமாக இருக்கிறது.

மேலும் இந்த லேப்டாப்பில் அதிக உயர் திறன் கொண்ட பேட்டரியை தேவைப்பட்டால் பொருத்திக் கொள்ளலாம். இந்த டெல் லேப்டாப்பின் விலை ரூ.75,000 ஆகும்.

இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே

இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர். அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.

எங்கேயும், எப்போதும்

தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கம்ப்யூட்டரே கண்கண்ட தெய்வம்!

ஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

கம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.

செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மலையாள இயக்குநரின் பாலிவுட் படத்தில் மீண்டும் விக்ரம்!

ராவண் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்குகிறார்.

விக்ரம் முதல் முதலாக நடித்த இந்திப் படம் ராவண். மணிரத்னம் இயக்கி படுதோல்வியைச் சந்தித்த படம் இது. ஆனாலும் படத்தில் ஹீரோ அபிஷேக் பச்சனை விட, ராவணாக நடித்த விக்ரமுக்கு ஏக பாராட்டுகள் குவிந்தன.

இப்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்துக்கு 'டேவிட்' என பெயர் வைத்துள்ளனர்.

மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த பிஜாய் நம்பியார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து விக்ரம் கூறுகையில், "பிஜாய் இயக்கும் இந்திப் படத்தில் நடிப்பது உண்மைதான். 2012-ல் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராவண் படம் பண்ண போதே, பிஜாயுடன் எனக்கு நெருங்கிய பழக்கம்," என்றார்.

இந்தியில் வெளியான சைத்தான் என்ற படத்தை ஏற்கெனவே இயக்கியவர் இந்த பிஜாய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசு பங்களாவில் விபசாரம்: டி.வி. நடிகை உள்பட 6 பெண்கள், 2 புரோக்கர்கள் கைது!

கோவை: கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த டி.வி. நடிகை உள்பட 6 பெண்களையும் 2 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்களில் விபசாரம் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

குறிப்பாக சென்னையிலிருந்து சிவி, சினிமா துணை நடிகைகள் பலர் இந்தப் பங்களாக்கு வந்து போவதாக தகவல் கிடைத்தது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையம் வி.ஜே.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு இரவு நேரத்தில் விலை உயர்ந்த கார்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பங்களாவுக்கு விலை உயர்ந்த 3 கார்கள் சென்றன.

உடனே போலீசார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அழகிகளும், வாடிக்கையாளர்களும் இருந்தனர்.

இதையடுத்து அங்கு இருந்த அழகிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்த போது சென்னையை சேர்ந்த டி.வி.நடிகை ஸ்ரீலட்சுமி (வயது 21), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டான்சர்கள் சிந்து (20), ஷீபா(21), கேரளாவை சேர்ந்த காயத்திரி மற்றும் ஆந்திராவை சேர்ந்த கவிதா(21) என தெரியவந்தது.

மற்றொரு அறையில் இருந்த வேலைக்கார பெண் லட்சுமி (41), புரோக்கர்கள் பாலாஜி (38) மற்றும் கிருஷ்ண மூர்த்தி(47) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பாலாஜியும், கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார்.

ஒரு அழகியை அழைத்து சென்றால் 5 நாட்கள் வரை அவர்களை இஷ்டப்படி அனுபவிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். 5 நாட்களுக்கும் அவர்களை எங்கு வேண்டும் என்றாலும் அழைத்து போகலாம், என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னரே அழகிகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பெண்களை அழைத்துச் செல்ல இடம் இல்லாத வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த சொகுசு பங்களாவுக்கு வந்தால் போதுமாம். அங்கு அவர்களுக்கு பிடித்த அழகிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் உடை

அங்கு வாடிக்கையாளர்கள் மனம் நோகாதபடி, அவர்களின் தேவை அறிந்து அழகிகள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூ.50 ஆயிரத்தில் புரோக்கர்கள் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொள்வார்கள். மீதி ரூ.25 ஆயிரம் இந்தப் பெண்களுக்கு.

அழகிகள் கைது செய்யப்பட்ட அறையில் இருந்து 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
  

Sunday, December 25, 2011

எந்திரனை மறந்தால் நண்பன் பிடிக்கும்: பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேச்சு

நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நடிகர் சத்யராஜ் புதுமையான வேடத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். தான் ஒரு இயக்குனர் என்ற போதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் சத்யன் ஒவ்வொரு காலகட்டத்தில் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள்.

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன்.
இவ்வாறு விஜய் கூறினார்
.
இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-
எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.
நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்.

இவ்வாறு ஷங்கர் கூறினார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:-
எனது மாணவர் உலகம் போற்றக்கூடிய இயக்குனராக வளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் இயக்குனர் ஷங்கரிடம் இருக்கும். அதுவே அவரது வெற்றியின் அடிப்படையாக உள்ளது.
நண்பன் திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்கான உரிமையை ஜெர்மினி சர்க்யூட் நிறுவனம் முன் கூட்டியே பெற்றுவிட்டது. இருப்பினும் அவர் விரும்பியபடியே இப்படத்துக்கு இயக்குனராகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்!

காரைக்கால்: தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

நாத்திகம் பேசுவோரில் பலரும் உள்ளுக்குள் ஆத்திகவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் முதல் அத்தனை துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஒரு தீவிர நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தினர் தீவிர ஆத்திகர்கள்.

அதேபோல சினிமாவில் விவேக்கைப் போல நாத்திகம் பேசியவர்கள் யாருமில்லை. நான் பெரியாரின் வழி வந்தவன் என்று பெருமை பொங்கக் கூறுவது விவேக்கின் வழக்கம். மேலும், தனது படங்களிலெல்லாம் ஆத்திகர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடிப்பார் விவேக். குறிப்பாக வாஸ்து பார்க்கிறவர்களையும், நாள் நட்சத்திரம் பார்ப்பவர்களையும், சாமியை நம்பி காரியத்தில் இறங்குகிறவர்களையும் இவர் கிண்டல் அடிக்காத படமே இல்லை.

அப்படிப்பட்ட விவேக், திருநள்ளாறு கோவிலுக்குப் போய் சனீஸ்வரனை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறு கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து சனி பகவானை தரிசித்துச் சென்றனர். பரிகாரங்களைச் செய்தனர்.

சனிப் பெயர்ச்சிக்கு அடுத்த நாளான சனிக்கிழமையன்று அமாவாசை என்பதால் அது விசேஷ தினமாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதையொட்டி அன்றும் பல லட்சம் பேர் சனி பகவானை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.

அந்த நாளில்தான் காமெடி நடிகர் விவேக்கும் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் உள்ளூர் எம்.எல்.ஏ. சிவாவும் வந்திருந்தார். கோவிலுக்கு வந்த விவேக் ஒவ்வொரு சன்னதியாக சென்று பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவில் பிரசாதத்தையும் பய பக்தியுடன் வாங்கிக் கொண்டார்.

இந்த திடீர் 'பய' பக்தி எதனாலோ...!

Saturday, December 24, 2011

இலங்கையில் அதிகம் கொல்லப்படும் திமிங்கிலங்கள்!

ஸ்ரீ லங்கா: இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்களை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, தேசிய கடலாய்வு திணைக்கத்தின் தலைவர் ஹிரான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கப்பல்களாலேயே அதிக திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.

போலி நகைகளை அடகு வைத்து நட்சத்திர ஓட்டல்களில் உல்லாசம்

சென்னை : ஆவடி நேரு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த் ஜெயின் (50). இவரிடம் தங்க நகை செய்யும் தொழிலாளிகளான திருவள்ளூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த பாஸ்கரன் (42), பட்டாபிராம் தேவராஜபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (38). ஆகியோர், அடிக்கடி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று சென்றனர். கடந்த 8 மாதத்தில் மட்டும் 50 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ரூ.6 லட்சம் வரை பெற்று சென்றிருக்கின்றனர். அடகு வைத்த நகைகளை  மீட்க வரவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அடகு கடைக்கு வந்தனர். மேலும், 4 சவரன் நகையை அடகு வைத்து ரூ.42 ஆயிரம் வாங்கினர். ஏற்கெனவே வைக்கப்பட்ட நகைகளை மீட்காமல், மேலும் நகைகளை அடகு வைத்ததால் 2 பேர் மீதும் மகாவீர் சந்த் ஜெயினுக்கு சந்கேகம் வந்தது. உடனடியாக, 4 சவரன் நகைகளை கம்ப்யூட்டர் மிஷின் மூலம் சோதனை நடத்தினார். அது போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் சந்த் ஜெயின், ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளையும் சோதனை செய்தார். அவைகளும் போலியானவை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, ஆவடி போலீசில் மகாவீர் சந்த் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 ஆசாமிகளையும் தேடினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கடேசன், பாஸ்கரன் ஆகியோரரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில். பாஸ்கரன், வெங்கடேசன் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கவரிங் கடையில் நகைகளை வாங்கி உள்ளனர்.

பின்னர், அதை தங்க மூலாம் பூசி, 916 கேடிஎம் நகை என்று முத்திரை குத்துவார்கள். மேலும், ஆவடியில் உள்ள பிரபல நகைக்கடை பெயரையும் அச்சிட்டுள்ளனர். அதை கொஞ்சம் கொஞ்சமாக அடகு கடையில் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் பாஸ்கரன், வெங்கடேசன் தங்களது நண்பருடன் பல இடங்களுக்கு சென்று பெண்களுடன் உல்லாசமாகவும், நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று மது விருந்திலும் கலந்து கொண்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 916 கேடியம் முத்திரை, பிரபல நகை கடை முத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திடீர் திருடனாக மாறிய கணவர்: போலீசிடம் போட்டுக்கொடுத்தார் மனைவி

ஊட்டி: ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

ஊட்டி அருகேயுள்ள தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமன் (60). அருவங்காடு வெடிமருந்து தொழிசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் சொந்த வீடு கட்டுவதற்காக, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு சென்ட்ரல் பாங்கில், 40 பவுன் நகையை அடகு வைப்பதற்காக, கடந்த 21ம் தேதி காலை சென்றுள்ளார். நகை வைத்திருந்த பையை ஒரு நாற்காலியில் வைத்து விட்டு, விண்ணப்ப படிவத்தை எடுப்பதற்காக கவுன்டருக்கு சென்று, திரும்பி பார்த்த போது, பை காணாமல் போனது.
இதுதொடர்பாக, ஊட்டி பி1 போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாக குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குமார் தாம்பட்டியை சேர்ந்தவர். பாலகொலாவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, குமார் ஊட்டி மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் கட்ட வந்த போது, ராமனிடம் உள்ள நகையை திருடி சென்றுள்ளார். நகையை வீட்டுக்கு கொண்டு

விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? - நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!

குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள்.

தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள், சாமி ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, ஜேகே ரித்தீஷ் படம் அளவுக்குக் கூட இல்லையே என்ற விமர்சனம் ராஜபாட்டை மீது விழுந்துவிட்டது (இந்தப் படத்தில் லத்தீஸ்வரன் என்று ஒரு ஹீரோவை வேறு விக்ரம் விமர்சனம் பண்ணுகிறார். அது ஜேகே ரித்தீஷா, லத்திகா ஹீரோ பவர் ஸ்டாரா என்ற காமெடி விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது!)

இந்த நிலையில், ராஜபாட்டைக்காக நிருபர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். இன்று ரெஸிடென்ஸி டவரில் நடந்த இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் நேரடியாகவே விக்ரமிடம் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சுசீந்திரன் - விக்ரம் என்றதும், பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. அதைப் பொய்யாக்கிவிட்டதே இந்தப் படம். ஏன் இப்படியொரு படம் தந்தீர்கள் விக்ரம்? என்று கேள்வி எழுப்ப, சற்று சுதாரித்து பதில் தந்தார் விக்ரம்.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு ஜாலியா, அதிரடியா, கலர்புல்லா ஒரு படம் தரணும் என்று விரும்பித்தான் இந்தப் படம் செய்தோம். இந்தக் கதை எனக்கு மிகவும பிடித்துப் போனதால் ஒப்புக் கொண்டோம். ஒரே மாதிரி சீரியஸ் படம் கொடுத்தா ரசிகர்களுக்கு அலுத்துப் போகும் என்பதால் எடுத்த முடிவு அது. நீங்கள் தியேட்டரில் ரசிகர்களோடு படம் பாருங்கள் (நேற்று நிருபர்களுடன் படம் பார்த்தார் விக்ரம்!!). ரசிகர்கள் எந்த அளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது," என்றார்!

சரி... படத்தில் வரும் நில அபகரிப்பு அக்கா கேரக்டர் நிஜத்தில் யாருங்க?

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்

அன்புத் தந்தையாம் இறைவன் இந்த மண்ணகத்தை அன்பு செய்ததின் அடையாளமாக நம் திருமகன் இயேசுவை நமக்குப் பரிசாகக் கொடுத்ததை இந்நன்னாளில் நினைவு கூர்ந்து யாவருடனும் இயேசுவின் பிறப்பால் விளைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.இயேசுவின் பிறப்பைப் பற்றி கபிரியேல் தூதர் மரியாவுக்கு அறிவிக்கின்றார். வானதூதர் மரியாவின் முன் தோன்றி, ‘‘அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’’ என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ‘‘மரியா, அஞ்சவேண்டாம். கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் நீர்! நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார்; அவருடைய தந்தையாம் தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது’’ என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், ‘‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’’ என்றார். வானதூதர் அவரிடம், ‘‘தூய ஆவி உம்மீது வரும். உன்னதக் கடவுளின் வல்லமை உம் மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனை கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’’ என்றார். பின்னர் மரியா, ‘‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’’ என்றார். அப்போது வானதூதர் அவரை விட்டு அகன்றார். (லூக்கா 1: 26&38)அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கெடுக்குமாறு கட்டளை பிறப்பித்தார். தம் பெயரை பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழி மரபினரான யோசேப்பும் தன் மண ஒப்பந்தமான மரியாவோடு பெயரைப் பதிவு செய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கே இருந்த பொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணியில் பொதிந்து மாட்டுத் தொழுவத்திலுள்ள தீவனத் தொட்டியில் கிடத்தினர்.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு குழந்தைக்கு ‘இயேசு’ என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர். இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தார்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோயிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்ப செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்க பெற்றோர் குழந்தையை உள்ளே கொண்டு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, ‘‘ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன. இம்மீட்பே பிற இனத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரவேலருக்குப் பெருமை’’ என்றார்.

குழந்தையைப் பற்றி சிமியோன் கூறியது குறித்து தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி மரியாவை நோக்கி, ‘‘இதோ, இக்குழந்தை இஸ்ரவேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’’ என்றார்.ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்த பின் கைம்பெண் ஆனவர். அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோயிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லோரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு யோசேப்பும் மரியாவும் குழந்தையுடன் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள் என்று லூக்காவின் இறையருள் கருத்து இவ்வாறு வெளிப்படுகிறது:
‘‘இயேசு தன் பணியை ஆரம்பிக்கையில் தூய ஆவியின் வல்லமையோடு அடியெடுத்து வைக்கின்றார். மெசியா தாவீதின் மகனாய், மனிதவழி மரபினராய் இல்லாமல் இறைவனின் வழி மரபாய் இருப்பார். மெசியா மனித வல்லமையை நம்பியிருக்காமல், தூய ஆவியின் வல்லமை கொண்டவராய் திகழ்வார்.’’

இயேசு கொண்டு வரும் அரசு, உலகில் நாம் காணும் அரசு போன்றது அல்ல. அது ஆன்மிக அரசு. இயேசுவை யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அவரே அரசர். அந்த அரசாட்சி அவர்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றென்றும் நிலைத்திருக்கும். அந்த ஆட்சிக்கு தூய ஆவியின் துணை இருக்கும். அந்த ஆட்சியின் உறுப்பினர்களாக மாற ரத்த உறவுகள் அவசியமில்லை. இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் ஒன்றே அந்த அரசிற்குள் நுழையத் தகுதியாகும்.&மணவைப்பிரியன் ஜெயதாஸ் பெர்னாண்டோ